வவுனியாவில் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்!!

289

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இன்னுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(26.06.2017) காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல்திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா உலுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.