வவுனியாவில் திருடப்பட்ட நகைகள் பிடிபட்டது : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

265

திருடப்பட்ட நகைகள் மூன்றரைப் பவுண் நகைகள் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓடியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் மது, போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிசார் கடமையில் நின்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கைப்பை ஒன்றுடன் நின்ற ஒருவரது கைப்பையை சோதனை செய்ய முயன்ற போது குறித்த நபர் தனது கைப்பையை விட்டுவிட்டு அவ் இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அக் கைப்பையை மீட்ட பொலிசார் அதனை சோதனை செய்த போது அதில் காப்பு, தோடு, மோதிரம் உள்ளடங்கிய மூன்றரைப் பவுண் நகைகள் காணப்பட்டுள்ளது.

அதனை மீட்ட மது போதைவஸ்து தடுப்பு பிரிவுப் பொலிசார் அதனை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த நகைகள் திருடப்பட்ட நகைகளாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள பொலிசார் அவற்றை தொலைத்தவர்கள் உரிய வகையில் அடையாளம் காட்டி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.