வவுனியாவில் அரச ஈட்டு முதலீட்டு வங்கி திறந்துவைப்பு!!

1015

 
அரச ஈட்டு முதலீட்டு வங்கி சகல வசதிகளுடனும் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா – கண்டி வீதியில் இன்று (28.06) காலை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர் டபியூ. எம்.தயாசிங்கவினால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாடிக்கையாளருக்கான கணக்கினையும் சிறுவர்களுக்கான கணக்கு இலக்கத்தினையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள், வவுனியா கிளையின் முகாமையாளர், உத்தியோகத்தர்கள், அரச தனியார் வங்கி முகாமையாளர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.