வவுனியாவில் சிறுவர் இல்லத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை : பொலிசார் தீவிர விசாரணை!!

1183

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இன்று (29.06.2017) மாலை 4.30 மணியவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பெற்றோரை இழந்த 11 வயதுச் சிறுமியொருவர் அடைக்கலம் புகுந்து வசித்து வந்துள்ளார். இன்று (29.06.2017) காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு மதியம் இல்லத்திற்கு திரும்பிய சிறுமி மாலை 4.30 மணியளவில் அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக குறித்த சிறுமியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.