வவுனியா கூமாங்குளத்தில் நேற்று (02.07.2017) மாலை 6.30 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூமாங்குளம் பல்லவன்குளம் பகுதியில் வசித்து வரும் சுப்பையா பெரியசாமி (56வயது) என்பவர் நேற்று (02.07.2017) மாலை அவரது வீட்டு கிணற்றில் நீர் எடுக்கும் சமயத்தில் கிணற்றினுள் வீழ்ந்து சம்பவ இடத்திலிலேயே மரணித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இக் கிணறு பாதுகாப்பற்ற கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.


















