வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்று (02.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சுமார் 750 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு வெளிச்சம் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பன்றிக்கெய்த குளம் பாடசாலையில் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் பா.லம்போதரன் செயலாளர் தி.கார்த்திக் பொருளாளர் செ.மேனன் ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.சிவகுமாரன் ஆகியோருடன் பல ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தலைமையுரை ஆற்றிய உதவிக்கல்விப் பணிப்பாளர் வடக்கு வலயம் வறுமையான மாணவர்களை அதிகம் கொண்டுள்ளது , இங்கு மாணவர்களுக்கு மேலதிக கற்கை வசதிகள் குறைவு. இன்று வெளிச்சம் பவுண்டேசன் இந்த தேவையை அறிந்து சேவையாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் தனது ஆசியுரையில் வறுமையை ஒழிக்கும் ஆண்டாக இந்த வருடம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இம்மாணவர்களுக்கு இப்படியான சேவை பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டார் .
பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலை, புதுக்குளம் கனிஸ்டவித்தியாலயம், தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலை , பாரதிதாசன் வித்தியாலயம், புளியங்குளம் ஆ.பாடசாலை, ஒலுமடு அ.த.க.பாடசாலை, கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வளவாளர்களாக ஆசிரியர்களான இ.பகீரதன், க.சந்திரகுமார் ம.முரளீதரன், அ.பாலசுந்தரம் , இ.சசிக்குமார், திருமதி சிவகுமாரன் ஆகியோர் கடமையாற்றினர்.
மாணவர்களுக்கு கையேடும் குளிர்பானங்களும் வழங்கி வைக்கப்பட்டன.














