வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் உதைபந்தாட்ட போட்டியில் 786 இளைஞர் கழகம் சம்பியன்!!

661

 
தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் வருடாந்த தேசிய விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் உதைப்பந்தாட்ட இறுதி போட்டி 02.07.2017 அன்று வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்டம் இளைய நிலா இளைஞர் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் வவுனியா பிரதேச மட்டத்தில் சம்பியனான 786 இளைஞர் கழகமும் செட்டிகுளம் பிரதேச மட்டத்தில் தெரிவான சென்.அன்ரனிஸ் இளைஞர் கழகமும் மோதியது. இப் போட்டியில் 1-0 எனும் கோல் வித்தியாசத்தில் வவுனியா பிரதேச சம்பியன் அணியான 786 இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.

மேற்படி 786 இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்து அணியானது வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த 02 வருடங்களாக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.