வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு!!

531

 
வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவி செல்வி டயந்தினி கண்ணதாசனுக்கு இலண்டனில் இயங்கும் V3 அமைப்பு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக இன்று (04.07.2017) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை அதிபர் செல்வி அமராவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் துவிச்சக்கர வண்டி ஒன்றை வழங்கினர்.

தந்தையான திரு.கண்ணதாசன் யுத்த காலங்களில் பல தடவைகள் பாதிக்கப்பட்டவர். இதனால் இவரது தலையில் தற்போது இனந்தெரியாத கட்டி உருவாகி திடீரென நடக்கமுடியாத நிலமைக்குள் தள்ளப்பட்டுள்ளார். நல்ல உழைப்பாளியான இவரது குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் . இதில் மூத்த மகள் உயர்தரம் கலைப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

திறமைசாலியான இவர் பூப்புகாரில் இருந்து நடந்து வருவதால் காலதாமதமாகியே பாடசாலையை வந்தடைகின்றார். இதனை அவதானித்த பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சதீஸ் ஆகியோர் மூலம் தாயாரான திருமதி இராசநாயகி கண்ணதாசன மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தியதற்கிணங்க இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் சமூக ஆர்வலர் புருஸோத்தமன், பாடசாலை உப அதிபர் திரு.நிமலன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.