மாணவியின் முகத்தை சிதைத்த பேஸ்புக் காதல்!!

525

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக் காதலால் வழிதவறி போயுள்ளார்.

திவ்யா என்ற மாணவிக்கும், முரளி என்பவருக்கும் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இருவரும், காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், திருமணம் செய்துக்கொள்ளலாம் என முரளி கூறியிருக்கிறார். அதனை நம்பி, அவருடன் கடந்த 30 ஆம் திகதி கல்லூரி மாணவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இருவரும், பண்ருட்டி அருகே செல்லும் போது சாலையோரத்தில் இருந்த கோயிலில் வைத்து கல்லூரி மாணவியை முரளி திருமணம் செய்திருக்கிறார்.

திடீரென அருகிலிருந்த முந்திரி தோப்பிற்கு மாணவியை அழைத்துச்சென்ற முரளி, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்பதால் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அதற்கு, மாணவி ஒப்புக்கொண்ட நிலையில், அவர் தலையில் மட்டும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, முரளி அங்கிருந்து தப்பிவிட்டார். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு அங்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தலை,முகம் முழுவதும் எரிந்த நிலையிலிருந்த மாணவிக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், தப்பியோடிய முரளி என்கிற நாராயணனை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.