வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் அனுசரணையில் இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு நேற்று (04.07.2017) 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரபல ஆசிரியர்களான S.குணசீலன் (உயிரியல்) , P. டீ.விஜேந்திரன் (இணைந்த கணிதம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இச் செயலமர்விற்கு நிதி உதவியினை விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்ற செல்வி கலீபா (2008 Bio) வழங்கியிருந்தமையுடன் இவ்செயலமர்வில் 60 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.