பேஸ்புக் காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி : உயிரோடு எரிக்கப்பட்ட பரிதாபம்!!

333

தமிழகத்தில் பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற கல்லூரி மாணவி உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30ம் திகதி தமிழகத்தின் பண்ருட்டி அடுத்து கானாகாவஞ்சாடியில் உள்ள சாலையோரத்தில் நள்ளிரவு இளம்பெண் ஒருவர் உயிருடன் தீக்காயங்களுடன் போராடியுள்ளார்.

அவ்வழியே ஆம்புலன்சில் சென்ற நபர் ஒருவர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பெயர் சக்தி(23) எனவும், சென்னையைச் சேர்ந்தவர் என்றும் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தனக்கும், சேலத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பின் காதலாக மாறியதாகவும், இதனால் கடந்த 28-ஆம் திகதி சென்னையில் இருந்து திருச்சி, மதுரை சென்று அதன் பின் தஞ்சையில் உள்ள ஹோட்டலில் தனி அறை எடுத்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தோம்.

அதன் பின் இருவரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்ற போது, அங்கிருந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணம் செய்து கொண்ட இருவரும் அங்கிருந்த முந்திரி தோப்பிற்கு சென்ற போது, நாரயணன் திடீரென்று பெட்ரோலை தன் மீது ஊற்றி தீயை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

இதனால் அருகிலிருந்து மண்ணை என் உடலில் போட்டு தீயை அணைக்க போராடினேன் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெண்ணின் பெற்றோர், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். பொலிசார் நாராயணனை வலைவீசி தேடி வருகின்றனர்.