இந்த வருடம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து திறமையாகக் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமையைத்தணிப்பதற்கு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் பல்வேறுபட்ட செயல்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் போரினால் பாதிக்கப்பட்டு தமது தாய் தந்தையரை இழந்துள்ள மாணவ மாணவிகளுக்கான பாதணிகள் இன்று மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டன் ‘சரஸ்வதி’ நம்பிக்கை நிதியம் வழங்கி வைத்தது.
பாடசாலை அதிபர் இ.தேவராஜா தலைமையில் இன்று புதன்கிழமை (05.06.2017) காலை பாடசாலை முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் 23 மாணவர்களுக்கு பாதணிகள் காலுறைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பாடசாலை உப அதிபர் த.ஸ்ரீகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் சமூக ஆர்வலர் திரு.புருசோத்தமன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
















