வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

649

வவுனியா,கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் இன்று (06.07.2017) காலை துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது வேன் மோதியதில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச்சென்றவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறிசுட்டான் பகுதியிலிருந்து கனகராயன்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதியதில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச்சென்ற வடிவேல் இரத்தினகுமார் (வயது 58 ) என்பவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.