கேரளாவைக் கலக்கும் பெண்!!

1155

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளார்.

கீதா கோபிநாத் அவர்களை ஆளுங்கட்சி நியமித்து இருந்தாலும் பல இடதுசாரி தலைவர்கள் இவரை ஆதரித்துள்ளனர்.

கேரளா எதற்காக இவரை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளது என்பதுதான் தற்போதை ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் இதோ,

கீதா கோபிநாத் தனது இளங்கலை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார்.

பின்னர் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டம் பெற்ற போது 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

அது தான் தன்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் கீதா ஒரு பார்வையாளர், அறிஞர் ஆவார்.

பொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்ஏ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார்.