கணவரின் வாசனை இன்னும் வருகின்றது : மனைவியின் உருக்கமான பதிவு!!

542

2001 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஷாஃபீக் கோரி மரணம் அடைந்தார்.

அவர் இறந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரின் நினைவு தினமான நேற்று அவரின் மனைவி சல்மா தனது முகநூலில் உருக்கமா பதிவினை பதிவிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி, என் வீட்டுக்கு சில ராணுவ அதிகாரிகளும் அவர்களின் மனைவிகளும் வந்தனர். ‘என் கணவர் உயிருடன் இல்லை’ என்கிற வேதனைத் தகவல் அவர்களிடத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலவே நான் உணர்ந்தேன். தகவல் பொய்யாக இருக்கக் கூடாதா என மனம் ஏங்கியது.

அப்போது, எனக்கு 29 வயதுதான் ஆகியிருந்தது. என் கணவரை மறந்துவிடும்படி என்னிடம் பலர் சொன்னார்கள். ஆனால், என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மறைந்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றுவரை என்னுடன்தான் இருக்கிறார்.

என்னைவிட எங்கள் குழந்தைகளைவிட, இந்த நாட்டைதான் அவர் அதிகம் நேசித்தார். இறந்ததாகச் சொல்லப்பட்ட அதே தினத்தில்தான் அவரிடமிருந்து எனக்குக் கடைசிக் கடிதமும் கிடைத்தது.

அத்துடன், கணவர் மேஜர் ஷாஃபீக் கோரியின் ராணுவ உடை அருகில் அவர் நிற்பது போன்ற புகைப்படத்தையும் சல்மா வெளியிட்டிருந்தார். ‘கணவரின் உடல் வாசம் அவரது யூனிஃபார்மில் இருந்து வெளிவருவதாக இன்றும் நம்புகிறேன்.

அதனால், அவரின் யூனிஃபார்மை நான் துவைக்காமல் வைத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.