வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

297

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (06.07) இரவு 8 மணியளவில் பேருந்து மையப்பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து அக்கறைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்டபொது பொதி செய்யப்பட்டு தனது பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட 1 கிலோ 950 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கஞ்சாவுடன் குறித்த நபரையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் முன்நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.