வவுனியாவில் வெற்று விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்து பெற்று மோசடி!!

620

வவுனியா கற்பகபுரம் கிராம மக்களிடம் முத்திரை ஒட்டப்பட்ட வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மோசடி இடம்பெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் பயனாளிகளுக்கு பணம் வழங்கும் குறிப்பிட்ட பத்திரம் வழங்கப்பட்டு அப்பத்திரங்கள் நிரப்பப்படாமல் முத்திரை ஒட்டப்பட்ட நிலையில் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மீள்குடியேற்ற கிராமமான கற்பகபுரம் கிராமத்திற்கு அண்மையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் 360 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட வெற்றுப்பத்திரத்தில் கிராம மக்களிடம் கையெழுத்து பெறுவதாகவும் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களிடம் உங்கள் வீட்டுத்திட்டம் ரத்து செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டனர்.