காதலியை கொன்றது ஏன் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

1292

தமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவர் மகள் தமிழா (18). சம்பவத்தன்று தமிழா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார், மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தங்கராஜ் பொலிசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் மகேந்திரன் (24) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். மேலும், கொலை குறித்து மகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

நானும், தமிழாவும் காதலித்து வந்தோம். இந்நிலையில், தமிழாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்ததும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு வரவழைத்து அவரிடம் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக நான் கேட்ட போது, எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நான் தமிழாவின் கழுத்தை அறுத்து கொன்றேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து மகேந்திரனை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.