இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுநலவாய மாநாட்டை கனேடிய பிரதமர் புறக்கணிப்பதாக உறுதிப்படுத்தியுள்ள சில மணிநேரங்களில் அவுஸ்திரேலிய பிரதமர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை காரணிகளை சுட்டிக்காட்டி பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் திட்டம் தமக்கு இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் சுயாதீன முடிவு பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.