வவுனியாவில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியோருக்கு வாழ்வாதாரப்பயிற்சி நெறி!!

692

 
2009 க்குப்பின் அண்மைக்கால நாட்டுநிலை காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கையர்களுக்கான பல்வேறு உதவிகள் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் வாழ்வாதாரப் பயிற்சிநெறி ஒன்று நேற்று (10.07.2017) திங்கட்கிழமை வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சோவா நிறுவனத்தால் நடாத்தப்பட்டது.

சுமார் 65 பயனாளிகள் இந்த வருடம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 30 பேருக்கான பயிற்சி நெறியே நேற்று நடைபெற்றது. கடந்த வருடம் 130 பயனாளிகள் இந்தத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் திட்ட அலுவலகர் அ.அமரகாஸன் சமூக வலுவூட்டல் அலுவலகர் செல்வி மேகலா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. இமல்டா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.