வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11.07.2017) மதியம் 3.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தொடர்பாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பாகவும் ஒருங்கினைந்த நேர அட்டவணை தொடர்பாகவும் தனியார் மற்றும் இ.போ.ச அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
வட மாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இ.போ.ச உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண இ.போ.சபையின் உத்தியோகத்தர்கள், தனியார் பேரூந்து அதிகாரிகள், வடக்கு மகாண தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், அமைச்சின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















