மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி. எல். ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் இன்று (12.07.2017) மாலை 5.30 மணியளவில் தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பிலாக விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாலை 6 மணியளவில் கலந்துரையாடல் முடிவடைந்து பின்னர் A9 வீதியூடாகச் சென்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு முன்னால் வாகனத்தினை தரித்து நிறுத்தினார்.
அதனையடுத்து வீதியில் நின்ற ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வாகனம் நின்ற இடத்திற்கு ஓடிய போதும் அவரின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தற்போது சந்திக்க நேரமில்லை என தெரிவித்துச் சென்றுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமரிக்காவின் கொடியினை கட்டி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















