அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றை கடந்த உறவினர்கள்!!

279

பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தலசாஜா கிராமத்தை சேர்ந்தவர் அன்கு மினியகா(30), நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மினியகாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் உதவியை கோரியுள்ளனர்.

ஆனால் அம்புலன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது, இதையடுத்து கர்ப்பிணி பெண்ணை அவரின் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து கொண்டே கரைபுரண்டோடிய நகபாலி ஆற்றை கடந்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் மினியகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது