வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (12.07) மாலை 6.30 மணியளவில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்டபோது கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஐங்கரன் (வயது 35) என்பவர் 4 கிலோ 300 கிராம் கஞ்சாவினை சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்டபோது கஞ்சா கடத்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன் குறித்த நபரையும் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் முன்நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்






