குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது ஏறி நடக்கும் நபர் : வினோத வழிபாடு!!

638

 
இந்தியாவில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது கடவுள் என்று கூறி நபர் ஒருவர் அவர்கள் மீது ஏறிச் சென்று ஆசீர்வாதம் வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் Andhra Pradesh மாநிலத்தில் உள்ள Anantapur மாவட்டத்தில் அமைந்துள்ள Lakshmi Narasimha Swami கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அது இந்தாண்டிற்கான ஏகாதசி திருவிழா இந்தமாதம் நடைபெற்றுள்ளது.

இத்திருவிழாவில் கலந்து கொண்டு கடவுளின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

அந்த நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென்று தரையில் விழுந்து, கடவுளை வணங்கினர்.

அப்போது நபர் ஒருவர் அங்கிருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது ஏறிச் செல்கிறார், ஆசிர்வாதம் வழங்குற்கிறார்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் இத்திருவிழாவின் போது,வந்து கடவுளை வணங்கினால் குழந்தை கிடைக்கும் என்றும், அதே போன்று நபர் ஒருவர் மீது கடவுள் இறங்கி அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்.