அனந்தபுளியங்குளத்தைச்சேர்ந்த கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்று வரை உடல் உள நலம் பாதிக்கப்பட்டுள்ள ஞானமனோகரன் என்பவரின் மகள் சப்திகாவுக்கு நேற்று மாவட்ட சமூக சேவை அலுவலகம் மூலம் துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
அனந்த புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவி சப்திகா. இவர் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வந்து கல்வி கற்று வருபவர். இதனால் பாடசாலைக்கு தினமும் காலதாமதமாகி வருவதுடன் பாதையால் வருகின்ற வழியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்.
இதனைக் கருத்தில் கொண்டு இவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி உதவுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவினர் மாவட்ட சமூகசேவை அலுவலகத்திடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து லண்டன் V3 அமைப்பைச்சேர்ந்த பி.என்.யோகநாதன் என்ற சமூக ஆர்வலர் தனது பிறந்த தினத்தைமுன்னிட்டு இந்த உதவியை வழங்கிவைத்தார் .
நேற்று (13.07.2017) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அனந்த புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் க.செல்வதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவதாஸ் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டா ர்.
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன், பாடசாலை உப அதிபர் திருமதி வி.வக்சலா, மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எஸ்.வஸந்தன், உளநல வைத்தியப்பிரிவு சமூக ஆதரவுப்பணியாளர் விஜிதரன் V3 அமைப்பைச் சேர்ந்த கி.உதயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் புருசோத்தமன், குகதாஸன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.














