வவுனியாவில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை திணைக்களங்கள் செயற்படுத்தப்படாவிட்டால் சம்மந்தப்பட்ட அமைச்சிற்கு அறிவிக்கப்படும்!!

930

 
வவுனியா வடக்கில் மருதோடை, பட்டிக்குடியிருப்பு, ஒலுமடு ஆகிய கிராமங்கள் யானையினால் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன் ஒரு மாதத்திற்கு முன்னர் கூட ஒருவர் யானையினால் தாக்கப்பட்டதாகவும், பட்டிக்குடியிருப்பு பகுதியில் யானை வேலிக்காக மரங்கள் இறக்கப்பட்ட போதும் அது பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்ட்டுள்ளது.

அத்துடன் நெடுங்கேணி பகுதிகளில் யானைகளின் தாக்கம் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களின் குடியிருப்புக்களை சூழ்ந்து யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வயல்களிற்கு மின்சார வேலிகள் அமைக்கவில்லை.

ஆனால் பதவியா போன்ற எல்லையோர சிங்களக் கிராமங்களிற்கு வயலிற்கும் சேர்த்தே மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணியை சேர்ந்த தேவராஜரால் கூறப்பட்டது. இதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி வயலிற்கும் சேர்த்து மின்சார வேலி அமைக்க தமக்கு அனுமதி இல்லை என்றும், மருதோடை கிராமத்திற்கான மின்சார வேலி ஒன்றரை மாதங்களில் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஜி.ரி.லிங்கநாதன் வனஜீவராசிகள் தினைக்களம், வனவள திணைக்களங்களங்கள் அபிவிருத்தி குழுவில் எடுக்கும் முடிவுகளினை செயற்படுத்துவதில்லை என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களினால் பிரதேச அபிவிருத்தி குழுவில் எடுக்கப்படும் முடிவுகளிற்கு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடைமுறைப்படுத்ததவரின் அத்தினைக்களங்களிற்கு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் அல்லது அமைச்சின் செயலாளர்களிற்கு அறிவிக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.