வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான், ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், இ.இந்திரராசா, ம.தியாகராஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மற்றும் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வீட்டுத்திட்ட பிரச்சனை, யானைப் பிரச்சனை, மலசலகூட பிரச்சனை, குளக்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.