போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம்!!

300

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

இடமிருந்து முந்தி செல்லும் மீறல்களுக்கு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த அபராதத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.