வவுனியா பிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று பிரதேச செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்..
பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட பிரதேச செயலகத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறிப்பாக காணிக் கிளையில் நிலவுவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து குறித்த விபரங்கள் எங்களிடம் பெற்றுத்தரப்பட்டால் அமைச்சரவையில் கலந்துரையாடி இங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






