இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு இந்த இறக்குமதி வீழ்ச்சிக்கும் ஒரு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர வேறு வாகன வகைகள் 39 ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் இது கடந்த மாதத்தில் 13 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவுகள் இதன் பிரதானமான காரணமாக இருப்பதுடன், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய இறக்குமதி வரி மற்றும் ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளமை போன்ற காரணங்களினாலும் வாகன இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.