வவுனியா பிரதேச செலயகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

1022

 
வவுனியாவில் இன்று(17.07.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ். சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அன்பக மாணவிகளின் கலை நிகழ்வுகளும், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிற்ப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலும் இசைக்கப்பட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை என்பன பரிமாறப்பட்டதுடன் சோமசுந்தரப்புலவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.