14 வயதான சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி செருப்பைத் திருடிய குற்றத்திற்காக குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறுவனை, கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மிக மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதுளை உயர் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றச் செயலுக்காக 10,000 ரூபா அபராதமும், ஒரு லட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜயசிங்க பதிரனலாகே லலித் குமார என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த துஷ்பிரயோக சம்பவம் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றுள்ளது.