டெஸ்ட் டியூப் பிரசவம் : தாய், சேய் பலியான பரிதாபம்!!

969

தமிழகத்தில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமாகியும் தாயும், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை முத்தரையர்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.

குழந்தை உருவாவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இருந்தது, இதனால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். இதன்படி திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவானது, இதனை தொடர்ந்து புதுவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்தனர், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் திவ்யாவும், இரட்டை குழந்தைகளும் இறந்து போயின.

அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது திவ்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இறப்புக்கான காரணம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

ஆனால் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் எனக்கூறி திவ்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுதொடர்பாக லாஸ்பேட்டை பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.