ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலை முயற்சி!!

485

தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளுக்கு முன் மனு அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் மாதந்தோறும் அது தொடர்பாக மனு அளித்துள்ளார். ஆனால் வீட்டு பட்டா வழங்கப்படவில்லை.

இதனால் மனமுடைந்த சரவணன், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை உள்ளிட்ட 13 பேருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 13 பேரையும் பொலிசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.