ரயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் கிடந்த பல்லி!!

319

ரயிலில் பயணி ஒருவருக்கு தரப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் பல்லி இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லியில் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது ஐ.ஆர்.சி.டி.சியால் தயாரிக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியை அவர் வாங்கியுள்ளார்.

பிரியாணி பாக்கெட்டை திறந்து பார்த்த போது அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு பெண் பயணி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இது குறித்து அவர் இந்தியாவின் ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

இதையடுத்து, உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.