சிறையில் அழுத சசிகலா : தூக்கமில்லாமல் திணறல்!!

282

அண்ணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிணை கிடைக்காததால் சிறையில் சசிகலா சோகத்தில் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மரணம் அடைந்தார்.

அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 5 நாட்கள் பிணை வழங்குமாறு சசிகலா சார்பில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டதால், அண்ணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகத்தில் சசிகலா சிறையில் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தூக்கமின்றியும் அவதிப்பட்டுள்ளார்.

மேலும் சிறை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளியான பின்னர் சிறை அதிகாரிகள் இரவு நேரங்களில் சசிகலாவை சரியாக தூங்க விடுவது இல்லை என அவர் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.