சம்பளம் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

252

ஊதியம் கேட்ட பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தை வெட்டிய நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை சேர்ந்தவர்கள் காஜல் ஷிண்டே மற்றும் சித்ரா. சகோதரிகளான இருவரும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த நிலையில், விடுமுறை நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவெடுத்தனர்.

அதன்படி அங்கிருந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 7000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். வேலை பார்த்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.

இதனால் வேலையை ராஜினாமா செய்த இருவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை டீம் லீடர் கைக்வாத்திடம் கேட்க, அவர் 15 நாட்கள் கழித்து தருவதாக கூறினார்.

பின்னர், ஒருநாளில் காஜல் மற்றும் சித்ரா இருவரையும் மால் ஒன்றுக்கு வரும்படியும் அங்கு வைத்து சம்பளத்தை தருவதாகவும் வைக்வாத் கூறியிருக்கிறார்

இதையடுத்து மாலின் மேல்தளத்துக்கு காஜல் மட்டும் சென்றுள்ளார். அங்கு வைத்து சம்பளத்தை கேட்ட போது, ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேர் அவரின் முகத்தையும் கழுத்தையும் கத்தியால் வெட்டியிருக்கின்றனர்.

ரத்தம் சொட்டிய நிலையில் அங்கிருந்து தப்பிய காஜல் அம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை சென்றிருக்கிறார்.

சம்பவம் குறித்து வைக்வாத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.