அறையில் பேய் : பயத்தில் எயார் இந்தியா ஊழியர்கள்!!

766

அமெரிக்காவில் எயார் இந்தியா ஊழியர்கள்தங்கும் அறையில் பேய் நடமாடும் காட்சிகள் வெளியாகி ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ நகரில் ஹோட்டலில் எயார் இந்தியா ஊழியர்கள் தங்கியுள்ளனர்.அவர்கள் அளித்துள்ள புகாரில், நாங்கள் ஹோட்டல் அறையில் தங்கி இருக்கும் போது விசித்திரமான ஒலிகளும், வாசனைகளும் வருகின்றன.

நாங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஓட்டல் அறைக்கு வருகிறோம். ஒவ்வொரு முறையும் இங்கு தங்கும் போது விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்த விடயத்தில் கவனம் எடுத்துகொள்ள நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சிகாகோ ஹோட்டல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளோம்என எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.