விளையாட்டு வினையானது : தீயில் கருகி பலியான சிறுவன்!!

858

தெலுங்கானா மாநிலத்தில் 11 வயது மாணவன் தொலைக்காட்சியை பார்த்து தீயில் சாகசம் செய்த போது தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரபல்லே காளி விஸ்வநாத் என்ற 11 வயது சிறுவன் மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தீயை வைத்து சாகசம் செய்யும் நிகழ்ச்சியை பார்த்துள்ளான்.

அதில் வாயிலிருந்து தீ வருவது போலவும், வட்டமிடுவது போலவும் சாகசம் செய்துள்ளனர். அதை பார்த்து தானும் அதைபோல செய்து பார்க்க வேண்டும் என எண்ணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளான். ஆனால் தீயானது அவன் உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

தொலைக்காட்சி தொடர்களை பார்த்து பல இடங்களில் சிறுவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபட்டு உயிரிழப்பது தொடர்ச்சியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.