இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படும் தமிழ் நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அமைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அமைச்சர் அனில் கோசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானுடன் இந்தியா கொண்டிருக்கின்ற உடன்படிக்கையை போன்று இந்த பொறிமுறையும் அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் தகவல் தந்த அவர், இலங்கையில் இந்திய மீனவர்கள் அதிக காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இந்த முறை தடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





