சென்னை அம்பத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைத்தளம் பூமிக்குள் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது குறித்த அடுக்குமாடி குடியிருப்பு. இதன் தரைத்தளத்தில் சந்திரசேகரன் (69) என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
சம்பவத்தின்போது வீட்டில் சந்திரசேகரனும் அவரது மனைவி உமாவும் மட்டும் இருந்துள்ளனர். உடல் நலம் குன்றியுள்ள சந்திரசேகரன், தமது அறையில் படுத்திருந்துள்ளார்.
அப்போது திடீரென சந்திரசேகரன் அலறும் சத்தம் கேட்டுள்ளது. பதறியடித்து வந்த உமா பார்த்த போது, சந்திரசேகரனின் அறை 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் இறங்கியுள்ளது.
சந்திரசேகர் அந்த பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். சத்தம் கேட்டு முதல், 2-வது மாடிகளில் இருந்தவர்கள் கீழே ஓடி வந்துள்ளனர். சந்திரசேகரனும், உமாவும் 10 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், ஒரு ஏணியை கொண்டு வந்து சந்திரசேகரனையும், அவரது மனைவியையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் சந்திரசேகரன் குடும்பத்தினர் 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், கட்டிடம் புதைந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதில் பூமியில் புதைந்த பகுதியில் கிணறு இருப்பது தெரிய வந்தது.
இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றது. கிணற்றை சரியாக மூடாதததே தரைத்தளம் பூமிக்குள் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.






