தமிழகத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமான தோழி ஒருவருக்காக இளைஞர் ஒருவர் தோழியின் தந்தையின் காரை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு(28). இவருக்கு பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அவர் தொழிலதிபரின் மகள் என்பதால், ஆடம்பரமாக செலவு செய்வார், ஆனால் குடும்பத்தார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதற்கிடையில் அப்பெண் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அவரது தந்தை வாங்கிக் கொடுக்கவில்லை. ஆனால் இவருக்கோ ஆப்பிள் போன் காட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் அவர் தனது தந்தையின் காரை திருடி, விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து போன் வாங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளார்.
இதனால் அவர் தனது பேஸ்புக் நண்பனான சந்துருவிடம் தனது தந்தையின் காரை திருடி விற்றுவிடு என்று கூறி, காரின் சாவியை கொடுத்துள்ளார்.
அதன் பின் சந்துரு சாவியை பயன்படுத்தி, காரை வீட்டிலிருந்து திருடியுள்ளார். திருடிய காரை விற்பதற்குள், பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், பொலிசார் சந்துருவை பிடித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், காரை திருடு என்று கூறினால், அப்போது பொலிசில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என தைரியம் அளித்தார். அதன் காரணமாகவே இந்த செயலில் ஈடுபட்டதாக சந்துரு கூறியுள்ளார்.






