சகோதரருக்கு தனது சிறுநீரகத்தை பரிசளித்த சகோதரி!!

813

 
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ள சகோதரருக்கு ரக்ஷா பந்தன் பரிசாக தனது சிறுநீரகத்தை வழங்கிய சகோதரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சாரா பாய் (38) இவரது இரு சிறுநீரகங்களும் திடீரென செயலிழந்து விட்டன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகமும் உடனடியாக கிடைக்கவில்லை.

விவேக்கின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே செல்ல அவருக்கு ரக்ஷா பந்தன் பரிசாக தனது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரின் சகோதரி வந்தனா சந்திரா முன் வந்தார்.

இதையடுத்து புதுடெல்லி மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தற்போது விவேக் மற்றும் வந்தனா இருவரும் நலமாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து ரஷா பந்தனை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

வந்தனா கூறுகையில், என் சகோதரர் விவேக்கை நான் அதிகம் நேசிக்கிறேன். என் கஷ்டமான சூழ்நிலையில் என்னுடன் அவர் இருந்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையை காப்பாற்றுவது என்பது எனக்கு முக்கியம் என வந்தனா கூறியுள்ளார்.