தாய், தந்தையை கொன்று நாடகமாடிய மகன்!!

656

தமிழகத்தில் மகன் ஒருவன் பெற்ற தாயை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஈசன் ஓடை பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ஈசன் ஓடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், ஆறுமுகத்தின் சகோதரிகளான ஆனந்தி, பொன்னியம்மாள், தாய் ராணியம்மாளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், ஆறுமுகமே தனது தாயை கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், தலையணையால் அழுத்தி மூச்சுத் திணற வைத்து தாயை படுகொலை செய்த ஆறுமுகம், பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்துவிட்டு, எஞ்சிய பாகங்களை வீட்டின் அருகே புதைத்துவிட்டு ஒன்றும் அறியாதவர்போல் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ராணியம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரது உடல் பாகங்களை தோண்டி எடுத்த பொலிசார், அதன் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆறுமுகத்தின் மனைவி பிரியாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு சொத்துக்காக தந்தை வேலாயுதம் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற ஆறுமுகம். பிணையில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது சொத்தை அபகரிக்கவே தாயையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.