மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி..!

641

ACCIDENT_logoமட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையின் காரணமாக, மோட்டார் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது படுகாயமடைந்த நபர் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதான கணேசபிள்ளை சண்கரன் என பொலிஸார் குறிப்பிட்டனர்.