இராமேஸ்வரத்தில் கைதான இலங்கை மீனவர்கள் பிணையில் விடுதலை..!

752

fisherஇராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவர்களான வர்ணகுல ஜெயசூரிய, ஜெலஸ்டின் புஷ்பகுமாரா ஆகிய இருவருமே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாத் 21ஆம் திகதி கடல் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டினன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டத்தில் பொலிசார் வழக்கு பதிந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை ராமேஸ்வரம் நீதிமன்றில் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் நேற்றைய வழங்கு விசாரணைகளின்போது 10 ஆயிரம் ரூபாய் பிணை தொகை அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.