நடுவீதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி!!

579

இந்தியாவில் பாடசாலைச் ஒருவர் நடு வீதியில் வைத்து தொண்டை அறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், பலியாவில் உள்ள கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ராகினி துபே 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களாக ராகினி பள்ளி சென்று வரும் போது அக்கிராமத் தலைவரின் மகன் கேலி செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ராகினி தனது சகோதரியுடன் பள்ளி சென்றுக்கொண்டிருந்த போது பைக்கில் பின்தொடர்ந்த கிராமத் தலைவரின் மகன் கேலி செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ராகினி அவனை எதிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த தலைவரின் மகன், ராகினியை நடு வீதியில் இழுத்து போட்டு கத்தியால் சரிமாரியாக வெட்டி தொண்டையை அறுத்து கொன்றுவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொல்லப்பட்ட ராகினியின் தாய், குற்றவாளியின் பிணம் வரும் வரை தனது மகளின் இறுதி சடங்கை நடத்தமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.