
ஜப்பானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவியதில்10 பேர் மரணமடைந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு ஜப்பானில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே தீ பரவியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் 8நோயாளர்களும் 2 வைத்தியசாலை பணியாளர்களும் அடங்குவதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4மாடிகளைக் கொண்டமைந்துள்ள வைத்தியசாலைக் கட்டிடத்தின் கீழ் தளத்திலிருந்து இந்தத் தீ பரவத் தொடங்கியதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





