கடமையில் இருக்கும் போதே உயிரை விட்ட பெண் காவலர் : நடந்தது என்ன?

518

பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் போதே பெண் காவலர் மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மதுரவாயலை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (39) பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

ஸ்ரீதேவி நேற்று அலுவலகத்தின் 6வது மாடியில் இருந்தார். அப்போது திடீரென மயக்கம் வருவது போல உள்ளது என சக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவி தனது நாற்காலியில் அமர்ந்தவாறே மரணம் அடைந்தார்.

இதனால் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீதேவிக்கு சுவாச பிரச்சினை கோளாறு இருந்த நிலையில் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளதாக சக பொலிசார் கூறியுள்ளனர்.